WLM அத்தியாயம் 3

‘வேண்டாம் வேண்டாம் என்றாலும் என் விதி ஏனோ அவனோடேயே என்னை கொண்டு போய் கோர்த்து விட்டுக்கொண்டிருந்தது. அவன் என்னில் ஈர்க்கப்பட்டிருக்கிறானா இல்லையா? நான் ஏன் அவனையே கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறேன்? எதற்குமே எனக்கு அப்போது விடை சொல்லத்தெரியவில்லை. அவனோடு அன்றைக்கு  இருளில் மறைந்திருக்க நேரிட்டபோது எனக்கு அவனிடம் இருந்த தயக்கமொன்று விடைபெற்று செல்ல அவனை நோக்கி ஓரடி மனத்தால் எடுத்து வைத்திருந்தேன். அது அப்போது எனக்கு புரியவில்லை.’ அன்றிரவு டைனிங் ஹாலில் சாப்பிட்ட பிறகு ஹாஸ்டலுக்கு முன்னே இருந்த …

WLM அத்தியாயம் 2

‘அவனை நான் மூன்று வருடங்களின் முன் இது போன்ற ஒரு வெள்ளிக்கிழமை தான் முதன் முதலில் சந்தித்தேன்..ஒரு நீதிபதியின் மகள் சந்திக்காத மனித வகையினரா என்ன? என் பத்தொன்பதாவது வயதில், என் உலகமும் மொழியும் புரியாத, ஒரு சின்ன செங்கல் வீட்டுக்குள் வாழும்,  எளிய மனிதனொருவன் முதற் சந்திப்பிலேயே என் மீது பாதிப்பை ஏற்படுத்தி விடுவான் என்று கனவிலும் நான் நினைத்திருக்கவில்லை’ 2009 January “ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு விவசாய குடும்பம் ஒதுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு இந்த செயன்முறை …

WLM அத்தியாயம் 1

“நான் ஏன் இங்கு வந்தேன் என்று எனக்கே தெளிவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னே என் நெஞ்சில் மலர்ந்த பூ கருகிவிட்டது என்று தான் எண்ணியிருந்தேன்…ஆனால் இரவின் குளிரில் , தனிமையில் அதன் வாசம் வருவதை உணரும் போது தான் அது கருகும் பூ அல்ல என்று புரிந்து கொண்டேன். என்ன செய்வது? எல்லாப்பூக்களும் பூஜைக்கு செல்வதில்லையே..இறுதியாக ஒரே ஒரு தடவை அவன் முகத்தை பார்த்து விட வேண்டும். அது போதும் எனக்கு!” மகா இல்லுப்பள்ளம பெண்கள் ஹாஸ்டலின் …